வரம் நீ.! சாபம் நான்.!
அந்த சாலை ஓரம் பார்த்த
யாரோவொரு பெண்ணாகவே
நீ இருந்திருக்கலாம்..
உன் காதலனின் தோழன் என
உரிமையுடன் நீ பேச,
மண்ணில் அக்கணமே மௌனமாய்
புதைந்துவிடுகிறேன்..!
கனவில் கூட உன்னை என்
காதலியை பார்க்கமுடியாமல்
விழித்திருக்கிறேன்..
என் காதலை கொன்று
நான் உயிர் பெற நினைக்க,
எங்கோ என்னுள் செதுக்கப்பட்ட
உன் நினைவுகள்,
எனக்கெதிரே சதிசெய்கிறது..!
உன்னால் ஒருமுறை
நிராகரிக்கப்பட்டால் போதுமே
என் காதல் மோட்சம் அடையும்..!