தவறாமல் கனவில் வந்து சிரிக்கும் பெண்னே,
என் மூளையில் சிக்கி தவிக்கிறாயே...
உன் கோவப் பார்வையைகூட
காதல் பார்வையாய் பார்க்கிறேன்..
என் கண்கள் நீ அறியாமல்
உன்னைக் காண நினைத்தாலும்
உன் பார்வையில் சிக்கியதும்
தப்பிக்க மறந்தது..
என் மேல் கோவம் ஏனடி பெண்னே,
நீயும் காதலித்துப் பார்
உன் பேனாகூட உன்னைக் கேட்காமல்
என் பெயரை எழுதும்..