Wednesday 14 March 2012

கவர்ந்தாய் மறைந்தாய்



கடற்கரையில் காலடி மணலை
கலவாடி செல்லும் அலை போல்
என்னை கவர்ந்து சென்றாயே..

கலயாத கனவுடன் காத்திருக்கிறேன்
நிஜமாய் நீ என் வாசல் வருவாய் என..

தூக்கத்தில் தாயை தேடும்
குழந்தையின் கைகளை போல்
அலைபாய்கிறது எனது உள்ளம்..

இயல்பு வாழ்க்கை இழந்து நிற்கிறேன்
என் நினைவு வந்தால் சொல்லியனுப்பு
என் இதயத்தின் பாரம் குறையும்..