Thursday 1 August 2013

தொலை(த்/ந்)தேன்..

உன்னைத் தேடும் வேகத்தில்
எங்கோ தொலைந்து விட்டேனடி..
இங்கே நான் சுவாசிக்க வெறும்
காற்று மட்டுமே உள்ளது..
நான் உயிர் வாழ – உன்
மூச்சுக் காற்றல்லவா
வேண்டும்..

என் உயிரைத் திறட்டி,
என் கண்களில்
தேக்கிவைத்துக்
காத்திருக்கிறேன்..
உன் முகம் பார்த்ததும்
அந்த உயிர் பிரியட்டும்..
உன் பிம்பமொடு சேர்ந்து
என் கண்கள் உறையட்டும்..


Thursday 6 June 2013

மின்னல்.. மழை..

மின்னல்..
வானத்தின் மறுபக்கம்
மின்னல் கோடுகளை
கிறுக்கி விளையாடும்
அந்த குழந்தை யாரோ.?

மழை..
மழை தூறல்கள் – உன்
மேனியில் பட்டு முத்தாகிட,
உன் முத்து சிரிப்பினை
உனக்கு அறிமுகம் செய்திட,

காற்றோடு கூடி பேசி
ஜன்னல் கண்ணாடியை
முட்டி முட்டி சோர்ந்து,
உன்னோடு சேர்ந்து
கண்ணீர் வடிக்குதடி..
பாவம்,
கொஞ்சம் ஜன்னலை
விட்டு விலகி நில்லடி..

என் உயிரே.!

மனதினில் மறயாமல்
தணலடிக்காத இதமான
சூரியன் போல்,
அஸ்தமம் மறந்து
என்னுள் ஒளிரும் உயிரே..
என் உயிரே..!

Tuesday 28 May 2013

வரம் நீ.! சாபம் நான்.!


அந்த சாலை ஓரம் பார்த்த
யாரோவொரு பெண்ணாகவே
நீ இருந்திருக்கலாம்..

உன் காதலனின் தோழன் என
உரிமையுடன் நீ பேச,
மண்ணில் அக்கணமே மௌனமாய்
புதைந்துவிடுகிறேன்..!

கனவில் கூட உன்னை என்
காதலியை பார்க்கமுடியாமல்
விழித்திருக்கிறேன்..

என் காதலை கொன்று
நான் உயிர் பெற நினைக்க,
எங்கோ என்னுள் செதுக்கப்பட்ட
உன் நினைவுகள்,
எனக்கெதிரே சதிசெய்கிறது..!

உன்னால் ஒருமுறை
நிராகரிக்கப்பட்டால் போதுமே
என் காதல் மோட்சம் அடையும்..!

Wednesday 8 May 2013

என் கை சேர்ந்த சின்ன நிலா..


தன் பிஞ்சு விரல்களால் அவள் சிறைப்பிடித்தது
என் சிறுவிரலை அல்ல என் ஆறடியை..

பெருமிதத்தில் தூக்கிப்பிடித்தேன்,
காற்றோடு சண்டையிடும்
அவள் காலடியில் என் இதயமிருக்க..