Thursday 1 August 2013

தொலை(த்/ந்)தேன்..

உன்னைத் தேடும் வேகத்தில்
எங்கோ தொலைந்து விட்டேனடி..
இங்கே நான் சுவாசிக்க வெறும்
காற்று மட்டுமே உள்ளது..
நான் உயிர் வாழ – உன்
மூச்சுக் காற்றல்லவா
வேண்டும்..

என் உயிரைத் திறட்டி,
என் கண்களில்
தேக்கிவைத்துக்
காத்திருக்கிறேன்..
உன் முகம் பார்த்ததும்
அந்த உயிர் பிரியட்டும்..
உன் பிம்பமொடு சேர்ந்து
என் கண்கள் உறையட்டும்..


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home